மருது நாயகமாக மாறிய கமல்..சாப்பிட்ட கையோடு மெய் சிலிர்த்து நின்ற லோகேஷ்..

First Published Jul 19, 2022, 6:27 PM IST

மருதநாயகம் படத்தை கமல் சார் என்னிடம் கொடுத்து இயக்கச் சொன்னால் நிச்சயம் ஏற்க மாட்டேன் அது அவருடைய உழைப்பு என கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

vikram

கைதி , மாஸ்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் லோகேஷ்  கனகராஜின் அடுத்த வெற்றியாக விக்ரம் படம் உருவாகி இருந்தது. கமலஹாசன் தயாரித்து நாயகனாக நடித்திருந்த இந்த படம்  பான் இந்தியா அளவில் ஹிட் அடித்த படமானது.  கமலஹாசன் உடன் விஜய் சேதுபதி பகத் பாஸில், காளிதாஸ் ஜெயராம் நரேன் மற்றும் வினோத் ஜோஸ் ஆகியோர் துணை இடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

vikram movie

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கடந்த ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூலை கண்டது இந்த படம். கிட்டத்தட்ட ரூ.442 கோடிக்கு மேல் வசூலை பெற்று கமலின் சிறந்த படங்களில் ஒன்றாகிவிட்டது. அதோடு உலக அளவில் ரூ 300 கோடி பாக்ஸை பெற்ற தென்னிந்திய நடிகர்களில் கமலை இதம பிடிக்க வைத்தது விக்ரம்.

மேலும் செய்திகளுக்கு..முன்னணி நாயகனை கரம் பிடிக்கும் மெர்சல் நாயகி நித்யா மேனன்?..

முன்னாள் ராணுவ ஏஜெண்டாக  வரும் கமல் தனது மகனின் உயிரிழப்பிற்கு காரணமாக போதை பொருள் கடத்தும் கும்பலை எவ்வாறு ஒடுக்குகிறார் என்பதே இந்த படத்தின் கதையாக இருந்தது. இதன் இறுதியில் கைதி  மற்றும் விக்ரம் 2 விற்கான துணுக்குகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...புஷ்பா 3 -ம் பாகத்தை கன்பார்ம் செய்த இயக்குனர்..பகத் பாசில் கொடுத்த ட்ரீட் நியூஸ்!

விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜுக்கு விலை உயர்ந்த கார், துணை இயக்குனர்களுக்கு பைக்குகளையும், ரோலக்ஸ் ஆக வந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த கை கடிகாரத்தையும் கமல் வழங்கி இருந்தார் அதோடு வெற்றி  விருந்துகளையும் கொடுத்திருந்தார். 

Kamal Queen Elizabeth

இந்நிலையில் படப்பிடிப்பின் போது விக்ரமுடன் உரையாடியது குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில்  கூறியுள்ளார். அதாவது கமலின் கனவு படமான மருதநாயகம் குறித்து பேசும் போது கமல் தனது கனவு நாயகனாக  கமல் மாறிவிடுவார் எனக் குறிப்பிட்டுள்ள அவர்,  ஒருமுறை மதிய உணவு சாப்பிடும் பொழுது படம் குறித்து பேசுகையில் லோகேஷ் கனகராஜ் கையில் பருக்கையுடன் எழுந்து நின்று உலகநாயகன் பேசிய வசனங்களை கண்கொட்டாமல் பார்த்ததாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..சர்ச்சை முடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாயகியுடன் சாமி தரிசனம் செய்த பார்த்திபன்

 அதோட மருதநாயகம் படத்தை கமல் சார் என்னிடம் கொடுத்து இயக்கச் சொன்னால் நிச்சயம் ஏற்க மாட்டேன் அது அவருடைய உழைப்பு என கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

click me!