தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான சரவணன் அருள், நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் தனது கடை விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா, ஸ்ரேயா போன்ற முன்னணி கதாநாயகிகளோடு நடித்து வந்தார். இதையடுத்து சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்க முடிவெடுத்த சரவணன் ‘தி லெஜண்ட்’ என்கிற திரைப்படத்தை தானே தயாரித்து நடிக்க உள்ளதாக அறிவித்தார்.