உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் நடிகை லாவண்யா திரிபாதி. இவரை பிரபலமாக்கியது தெலுங்கு சினிமா தான். தெலுங்கில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அண்டல ராக்ஷசி என்கிற படம் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தார் லாவண்யா. இதையடுத்து சசிகுமார் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீஸ் ஆன பிரம்மன் திரைப்படம் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்த அவருக்கு, தெலுங்கில் அடுத்தடுத்து பட வாய்ப்பு குவிந்ததால், அங்கு செட்டிலானார்.