விளம்பரங்களில் நடிகர், நடிகைகள் நடித்தால் தான் மக்கள் ரசிப்பார்கள் என்கிற டிரெண்ட் தற்போது மாறிவிட்டது. இதனை உடைத்தெறிந்தவர் லெஜண்ட் சரவணன். இவர் தனது கடை விளம்பரங்களில் தானே நடித்து புது டிரெண்டை உருவாக்கினார். இதை மற்ற பெரிய தொழிலதிபர்களும் பின்பற்றத் தொடங்கினர்.
அவ்வாறு பிரபலமானவர் தான் கிரண்குமார். நகைக்கடை நடத்தி வரும் இவர் தனது கடைக்கான விளம்பரங்களில் தானே நடித்து வருகிறார். சமீபத்தில் லெஜண்ட் சரவணன் சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அவர் நடித்த லெஜண்ட் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
இதனிடையே லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக பிரபல நகைக்கடை ஓனரான கிரண்குமாரும் சினிமாவில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக அல்ட்ரா லெஜண்டாக களமிறங்க இருப்பதாக சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில், அதுகுறித்து கிரண்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, தனக்கு சினிமாவுக்கு வரும் எண்ணம் சுத்தமாக இல்லை என கூறி உள்ளார். மேலும் தன்னால் டான்ஸ் எல்லாம் ஆட முடியாது என்றும், தற்போது இருக்கும் இடமே தனக்கு போதும் என்றும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கிரண்குமார்.
இதையும் படியுங்கள்... பாய்மரப் படகு பயணத்தில் உலக சாதனை..காவலர்களுக்கு வாழ்த்து சொன்ன கமல்