KS Chithra: 'மகளின் மரணத்துக்குப் பிறகு கோயிலுக்கே போகல, யாரையும் பார்க்கல' - மனம் திறந்த சித்ரா

Published : Apr 18, 2026, 11:14 PM IST

தனது மகளின் மரணத்திற்கு பிறகு தான் அனுபவித்த கடுமையான மன உளைச்சல்கள் குறித்து பாடகி கே.எஸ். சித்ரா மனம் திறந்துள்ளார். இசை உலகிலிருந்தும், கடவுள் நம்பிக்கையிலிருந்தும் விலகியிருந்த தன்னை, இளையராஜா, லதா மங்கேஷ்கர் மீண்டும் வர உதவியதா தெரிவித்துள்ளார்.

PREV
14
சின்னக்குயில் சித்ரா..

தென்னிந்தியாவின் சின்னக்குயில் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் பாடகி கே.எஸ். சித்ரா. இவருடைய பாடலைக் கேட்காமல் ஒரு நாள் கூட நம்மால் கடந்துபோக முடியாது. பல மொழிகளில், பல விதமான பாடல்களைப் பாடியுள்ள சித்ராவின் மகள் நந்தனா, இந்த உலகை விட்டுப் பிரிந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது.

2011-ல் துபாயில் உள்ள ஒரு வில்லாவின் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து நந்தனா உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது ஒன்பது. அந்தப் பெரிய அதிர்ச்சியில் இருந்து தான் எப்படி மீண்டு வந்தேன், கோயிலுக்குப் போகவே பிடிக்காமல் இருந்த தருணங்கள் பற்றியும் கே.எஸ். சித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாகப் பேசியுள்ளார்.

24
திரும்பி வர எண்ணமே இல்லை

"என்னை மீண்டும் பாடவைக்க ரஞ்சினி ஹரிதாஸ், விஜய் டிவியின் ரௌஃப் போன்றவர்கள் ரொம்பவே முயற்சி செய்தார்கள். நான் வந்தால்தான் ஷூட்டிங் தொடங்கும் என்று காத்திருந்தனர். ஏசியாநெட் சேனலில் இருந்து ஒவ்வொரு மாதமும் ரஞ்சினியை என் வீட்டுக்கு அனுப்புவார்கள். ஆனால், அப்போதெல்லாம் எனக்குத் திரும்பி வரவேண்டும் என்ற எண்ணமே இல்லை. அந்த சமயத்தில்தான் லதா மங்கேஷ்கர் பெயரில் எனக்கு ஒரு விருது கிடைத்தது. ஹைதராபாத் சென்று அதை நான் வாங்க வேண்டும். ஆனால், வெளியே எங்கும் செல்லும் மனநிலையில் நான் இல்லை. அப்போதுதான் லதா ஜி எனக்கு போன் செய்து, 'நீ கண்டிப்பா வரணும்' என்று சொன்னார். எனக்கு கவுன்சிலிங் கொடுக்க தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என நிறைய பேர் வந்தார்கள்," என்று சித்ரா கூறினார்.

34
நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாட ஆரம்பித்தேன்..

"ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகுதான் நான் மீண்டும் பாட ஆரம்பித்தேன். அதுவும் ராஜா சாரின் நிகழ்ச்சி. 'என்னால் பாட முடியாது' என்று ராஜா சாரிடம் தெரிவித்தேன். ஆனால், 'நீ வரவில்லை என்றால், நான் இந்த நிகழ்ச்சியையே ரத்து செய்துவிடுவேன்' என்று அவர் சொன்னார். அந்த நேரத்தில், அவருடைய மனைவி இறந்து மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தது. 'என் கூட 33 வருஷம் வாழ்ந்தவங்க போயிட்டாங்க, நான் நிகழ்ச்சிக்கு வரலையா? நீ அப்படி நினைக்கக் கூடாது, கண்டிப்பா வரணும்' என்றெல்லாம் சொல்லி என்னை வரவழைத்தார்," என்றும் கே.எஸ். சித்ரா நினைவுகூர்ந்தார். தன்யா வர்மாவுடனான ஒரு நேர்காணலில்தான் சித்ரா இந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

44
கடவுளை விட்டு நீண்ட தூரம்..

அது கடவுளுடன் தனக்கு ஒரு தூரம் ஏற்பட்ட நேரம் என்றும் சித்ரா குறிப்பிட்டார். "இப்படி எல்லாம் நடக்க நான் என்ன தப்பு செய்தேன்? யாரையாவது நான் காயப்படுத்தினேனா? ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகளிடம் ஏதாவது சொல்லி அவர்கள் மனதை நோகடித்துவிட்டேனா? அது சாபமாக இருக்குமோ? இப்படி பலவாறு சிந்தனைகள் போகும். நமக்கு என்ன எழுதியிருக்கிறதோ அது நடந்தே தீரும். எந்தக் கடவுளை வேண்டினாலும் சோதனைகள் வரும். அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியைத்தான் கடவுள் கொடுக்கிறார். அது யாரோ ஒருவரின் மெசேஜ் மூலமாகவோ அல்லது வேறு வழியாகவோ நமக்குக் கிடைக்கும். சில நேரம் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இல்லை. எந்தக் கோயிலுக்கும் போக வேண்டாம், யாரையும் பார்க்க வேண்டாம் என்று இருந்தேன். அந்த நேரத்தில் திருச்சூரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. தங்குவதற்காக ரூம் தேடியபோது, அது குருவாயூர் கோயில் நடைக்கு அருகில் அமைந்தது. பகவான் என்னை மீண்டும் அழைப்பதாகவே எனக்குத் தோன்றியது. அன்று நான் கோயிலுக்குப் போனேன். நீண்ட நேரம் அழுதுவிட்டுத் திரும்பி வந்தேன்," என்றார் சித்ரா.

"இப்படி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால், நம்முடன் இருப்பவர்களின் வாழ்க்கையும் கஷ்டமாகுமே தவிர, நாம் இழந்தது திரும்பக் கிடைக்கப் போவதில்லை. இது ஒரு கட்டத்தில் எனக்குப் புரிந்தது. என்னைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். நான் சோர்ந்து போனால், அவர்களுடைய வாழ்க்கையும் சோர்ந்து போகுமல்லவா? நாம் பல கனவுகளைக் காண்போம். அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஆனால், ஒரே ஒரு நொடியில் எல்லாம் மாறிவிடும். கடவுளின் முடிவுதான் இறுதியானது. அந்த சம்பவத்திற்குப் பிறகு நான் திட்டமிடுவதையே நிறுத்திவிட்டேன். என்ன வருகிறதோ, அதை அப்போது எதிர்கொள்ள வேண்டும். நாளைக்கு என்று எதையும் சேர்த்து வைப்பதில் அர்த்தமில்லை. கனவு கண்டு கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை," என்றும் சித்ரா உருக்கத்துடன் கூறினார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories