கதிகலங்கிப்போன டோலிவுட்
தெலுங்கில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்ட ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படம், கே.ஜி.எஃப் 2-வின் வருகையால் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. இதையடுத்து 2 வாரத்துக்கு கே.ஜி.எஃப் 2 வுக்கு போட்டியாக எந்த தெலுங்கு படமும் வெளியிடப்படவில்லை. கடந்த மாத இறுதியில் சிரஞ்சீவி, ராம்சரண் நடித்த ஆச்சார்யா படம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. அப்படம் படு மோசமாக இருந்ததால், ஓரிரு நாட்களிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு மீண்டும் கே.ஜி.எஃப் 2 ஆக்கிரமித்தது. ஆச்சார்யா படம் 50 கோடிக்கு மேல் நஷ்டமடைந்ததாக கூறப்படுகிறது.