தொடர்ந்து பேசிய அவர், சிம்பு உதவி செய்ததற்கு ஒரு வாரத்திற்கு பின்னர் எனக்கு போன் செய்தார். அப்போது கெட்டவன் படத்தின் கிளைமாக்ஸில் வரும் வசனம் பற்றி என்னிடம் கேட்டார். எதற்கு என நான் கேட்டேன். அப்போது தான் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்துக்கு அந்த டயலாக் தேவைப்படுகிறது. அதை வைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது என கூறினார். உடனே நானும் எனக்கு உதவியெல்லாம் செய்திருக்கிறாரே என்பதற்காக அந்த வசனத்தை கூறினேன்.