நயன்தாராவை அடுத்து தடுப்பூசி சர்ச்சையில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்! ஊசியே காணும் என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்!

First Published May 23, 2021, 10:51 AM IST

கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் விதமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும், கீர்த்தி சுரேஷ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 

கொரோனாவின் முதல் அலை தமிழகத்தில், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர பேராயுதமாக இருப்பது தடுப்பூசிகள் மட்டுமே என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
undefined
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தடுப்பூசிகள் போட்டு கொண்டால் மட்டுமே, நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.
undefined
எனவே அடுத்தடுத்து நடிகர் நடிகைகளில், தங்களின் நலன் கருதி கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு, அந்த புகைப்படத்தை, சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.
undefined
சமீபத்தில் கூட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா... காதலர் விக்னேஷ் சிவனுடன் வந்து சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு கொண்டார். இதில் நயன்தாராவின் தடுப்பூசி புகைப்படம் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
undefined
செவிலியரின் விரல்கள் மட்டுமே அந்த புகைப்படத்தில் தெரிந்ததால் ... உண்மையில் நயன்தாரா தடுப்பூசி போட்டு கொண்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். பின்னர் லேசாக தடுப்பூசி தெரியும் படியான புகைப்படத்தை வெளியிட்டு இந்த சர்ச்சைக்கு நயன்தாரா தரப்பு முற்று புள்ளி வைத்தது.
undefined
இவரை தொடர்ந்து, இதே சர்ச்சையில் சிக்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். தடுப்பூசி போட்டு கொள்ளும் போது ஊசி தெரியாததால் நெட்டிசன்கள் ஊசியே காணும் என விமர்சித்து வருகிறார்கள்.
undefined
இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்க ஊசி போட்டு கொண்டது தெரிவது போல் கீர்த்தி சுரேஷ் வேறு புகைப்படத்தை வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
undefined
click me!