தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்திருந்த நிலையிலும், மும்பை விட பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்திற்கும் மிகாமல் பாதிப்புகள் உள்ளது. மேலும் குழந்தைகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
undefined
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர, 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் பணிகளும் முழு வீசியில் நடந்து வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த இக்கட்டான கொரோனா நேரத்தில் பிரபலங்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து தங்களது மனிதாபிமானத்தை வெளிக்காட்டி வரும் செயல்களும் நடந்து வருகிறது.
undefined
அந்த வகையில், இயக்குனர் லிங்கு சாமி... கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் போதிய பெட் வசதி இல்லாமல் அவஸ்தை படுவதை தவிர்க்கும் வகையில், மணப்பாக்கத்தில் உள்ள ஆசிரமத்தை 50 படுக்கைகள் கொண்ட கோவிட் 19 மருத்துவமனையாக மாற்றியுள்ளார். இயக்குநர் லிங்குசாமி இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
undefined
இந்த மருத்துவமனையை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
undefined
இதுகுறித்த தகவலை இயக்குனர் லிங்குசாமி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் அமைச்சர் தாமோ. அன்பரசன், ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
undefined