ஒரே வரியை காப்பியடித்து 2 பாடல்களில் பயன்படுத்திய கவிஞர் வாலி... இரண்டு பாட்டுமே சூப்பர் ஹிட்!!

First Published Sep 13, 2024, 2:03 PM IST

Kavignar Vaali used same lyrics for 2 Songs : பாடலாசிரியர் வாலி, தனக்கு மிகவும் பிடித்த பாடல் வரி ஒன்றை 2 வெவ்வேறு பட பாடல்களில் பயன்படுத்தி அந்த இரண்டு பாடல்களுமே ஹிட்டாகி உள்ளனர்.

Vaali

தமிழ் சினிமா ரசிகர்கள் காலம் கடந்து கொண்டாடும் பல்வேறு மாஸ்டர் பீஸ் பாடல்களை கொடுத்தவர் வாலி. இவர் இளையராஜா இசையில் ஏராளமான ஹிட் பாடல்களுக்கு வரிகளை எழுதி இருக்கிறார். அப்படி இளையராஜா இசையில் வாலி எழுதிய இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களில் ஒரே பாடல் வரிகள் இடம்பெற்று இருப்பதைப் பற்றியும், அந்த வரிகளை எவ்வளவு அழகாக அவர் பயன்படுத்தி இருக்கிறார் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

Lyricist Vaali

வாலி - இளையராஜா கூட்டணியில் உருவான வெற்றிப்பாடல்களில் கல்யாண மாலை பாடலும் ஒன்று. இப்பாடல் கடந்த 1989-ம் ஆண்டு வெளிவந்த புதுப் புது அர்த்தங்கள் படத்தில் இடம்பெற்று இருக்கும். இப்படத்தை பாலச்சந்தர் இயக்கி இருந்தார். இப்படத்தில் ரகுமான் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக கீதாவும் நடித்திருந்தனர். இப்படத்திற்காக இளையராஜா இசையமைத்த கல்யாண மாலை பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி இருந்தார்.

Latest Videos


Pudhu Pudhu Arthangal Song

அப்பாடலுக்கு வாலி வரிகளை எழுதி இருந்தார். அதில், ‘கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் அடைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா... சோலை மயில் தன்னை சிறைவைத்து பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா’ என்கிற வரியை எழுதி இருப்பார் வாலி. இந்த வரிகள் வாலிக்கு மிகவும் பிடித்துப்போனதால் இதே வரிகளை கடந்த 1991ம் ஆண்டு வெளிவந்த சின்னத்தம்பி படத்திலும் ஒரு பாடலுக்கு அதே உவமையுடன் பயன்படுத்தி இருப்பார் வாலி.

இதையும் படியுங்கள்... ரஜினியுடன் நடிக்கக்கூடாது... நடிகைகளுக்கு முட்டுக்கட்டை போட்டாரா எம்.ஜி.ஆர்? பிளாஷ்பேக் சீக்ரட்ஸ்

Chinna Thambi

அப்படத்தில் இடம்பெறும் குயிலப்புடிச்சி கூண்டில் அடச்சு பாடலில் தான் அந்த வரிகளை பயன்படுத்தி இருப்பார் வாலி. இதில்  ‘குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்; மயிலப்புடிச்சு கால ஒடச்சு ஆடச்சொல்லுகிற உலகம்’ என எழுதி இருப்பார் வாலி. இந்த இரண்டு பாடல்களுக்குமே இசையமைத்தது இளையராஜா தான். அதேபோல் இந்த இரண்டு பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாடி இருந்தார் என்பது கூடுதல் சிறப்பு.

Secret Behind Chinna Thambi song

சின்னத்தம்பி திரைப்படத்தை பி வாசு இயக்கி இருந்தார். இப்படத்தில் நாயகனாக பிரபுவும் நாயகியாக குஷ்புவும் நடித்திருந்தார்கள். இதில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. நடிகர் பிரபு மற்றும் குஷ்புவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது சின்னத்தம்பி தான். இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது.

இதையும் படியுங்கள்... மூச்சு கூட நடிகைகள் மீது பட்டதில்ல... உத்தமன் என பெயரெடுத்த டி.ராஜேந்தர் சிக்கிய கிசுகிசு பற்றி தெரியுமா?

click me!