மணமகள் படத்துக்கு கருணாநிதி தான் கதை, வசனம் எழுத வேண்டும் என விரும்பி அவரை அணுகி இருக்கிறார் என்.எஸ்.கே. இருவருமே கொள்கை கூட்டாளிகள் என்பதால், இப்படத்திற்காக சம்பளம் பேசுவதில் இருவருக்கும் இடையே சில இழுபறியும் இருந்துள்ளது. கருணாநிதி வசனம் எழுத ஓகே சொன்னதும், சம்பளம் எவ்வளவு என என்.எஸ்.கே கேட்க, இதற்கு சிரித்துள்ளார் கலைஞர். உடனே விளையாட்டாக ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து 00001 என எழுதி நீட்டினாராம் என்.எஸ்.கே.