கார்த்திக் மாமியாரை நோட்டம் விட்ட சந்திரலேகாவின் அடுத்த பிளான்: கார்த்திகை தீபம் 2!

Published : Jul 24, 2025, 10:20 AM IST

கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக்கை பழிதீர்க்க அவரது முன்னாள் மனைவியின் மாமியாரை பாலோ செய்ய ஆரம்பித்துவிட்டார் சந்திரலேகா..

PREV
14
சந்திரலேகாவுடன் சபதம் எடுத்துக் கொண்ட கார்த்திக் ராஜா

சீரியல்களின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ5 டிவி போன்ற சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. கார்த்திகை தீபம் சீரியல் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிறது.

பொதுவாக, சீரியல்களில் இரண்டாம் பாகம் என்றால் சிறிய மாற்றங்களுடன் கதை தொடரும். கார்த்திகை தீபம் 2-ம் பாகத்தில் கார்த்திக் டிரைவராகவும், வீட்டு மாப்பிள்ளையாகவும் இருக்கிறார்.

24
சந்திரலேகாவுடன் சபதம் எடுத்துக் கொண்ட கார்த்திக் ராஜா

கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் டிரைவராகக் காட்டப்படுகிறார். நேற்றைய பகுதியில், சிவனாண்டி நவீன் மற்றும் துர்காவை கோவிலில் அடைத்து வைக்க, கார்த்திக் அவர்களைக் காப்பாற்றுகிறார். இன்றைய பகுதியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

34
புதிய பிளான் போட்ட கார்த்திக்

கோவிலில் அடைக்கப்பட்டிருந்த துர்கா, நவீனை கார்த்திக் காப்பாற்றுகிறார். ரேவதி துர்காவிடம் கோபப்பட்டு, நவீனுடன் நிச்சயதார்த்தம் நடக்கும் என்கிறார். கார்த்திக் அத்தை தேர்தலில் நிற்பதால், கார்த்திக் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்துகிறார். சிவனாண்டி நவீனைக் கடத்தத் திட்டமிடுகிறார்.

44
துர்காவிற்கும் நவீனுக்கும் எப்போது கல்யாணம்

சிவனாண்டிக்கு முன்பாகவே கார்த்திக் நவீனைக் காப்பாற்றுகிறார். துர்காவுக்குத் தான்தான் நிச்சயம் நடக்கும் என்று சந்திரகலாவிடம் சவால் விடுகிறார். சவாலில் ஜெயித்தால், சந்திரகலா சிவனாண்டியுடன் செல்ல வேண்டும் என்றும், தோற்றால், தான் ராஜா சேதுபதியின் பேரன் என்பதை சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல வேண்டும் என்றும் கார்த்திக் கூறுகிறார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories