நடிகர் கார்த்திக்கு 2022-ம் ஆண்டு மிகவும் சக்சஸ்புல்லான ஆண்டாக அமைந்தது. கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதில் பொன்னியின் செல்வன் ரூ.500 கோடிக்கு மேலும், சர்தார் ரூ.100 கோடிக்கு மேலும் வசூல் ஈட்டி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தன.
24
இந்த வருடம் அவர் நடிப்பில் முதலாவதாக ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதன் ரிலீசுக்கு இன்னும் 100 நாட்களே எஞ்சி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ராஜு முருகன் இயக்கும் ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கார்த்தி அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் அடுத்தபடத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்க உள்ளாராம். இவர் தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன 96 படத்தை இயக்கியவர் ஆவார். அப்படத்துக்கு பின் அதன் தெலுங்கு ரீமேக்கை இயக்கிய பிரேம் குமார் தற்போது நடிகர் கார்த்தி உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.
44
கார்த்தி- பிரேம் குமார் கூட்டணியில் உருவாக உள்ள படத்துக்கு ஜல்லிக்கட்டு என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கார்த்தியின் அண்ணன் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் ஜல்லிக்கட்டு சம்பந்தமான கதையில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த நிலையில், கார்த்தி ஜல்லிக்கட்டு என்கிற தலைப்புடன் களமிறங்கி உள்ளதால், இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.