காந்தாரா பட நடிகர் 33 வயதில் மாரடைப்பால் மரணம்; டான்ஸ் ஆடும்போதே உயிர்பிரிந்த சோகம்

Published : May 13, 2025, 07:43 AM ISTUpdated : May 13, 2025, 07:53 AM IST

கன்னட நடிகர் ராகேஷ் பூஜாரி மாரடைப்பால் காலமானார். நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடியபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. அவருக்கு வயது வெறும் 33 தான்.

PREV
14
Rakesh Poojary Death

கன்னட சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த நடிகர் ராகேஷ் பூஜாரி மாரடைப்பால் காலமானார். உடுப்பி மாவட்டம் கார்கலம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடியபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்ட ராகேஷ், நேற்று தனியார் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் நண்பர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. குறைந்த ரத்த அழுத்தமும் அவருக்கு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

24
ராகேஷ் பூஜாரி மரணம்

சோர்வாக இருப்பதாக நண்பர்களிடம் கூறிய ராகேஷை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நள்ளிரவு 1 மணியளவில் உயிரிழந்த ராகேஷ், கடைசியாக 'தஸ்தக்' படத்தின் முதல் காட்சியில் கலந்து கொண்டார். அவருக்கு வயது 33. சமீபத்தில் விபத்துக்குள்ளான அவருக்கு வேறு உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக கார்கலம் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

34
யார் இந்த ராகேஷ் பூஜாரி?

ஹூடேவைச் சேர்ந்த தினகர் பூஜாரி - சாம்பவி தம்பதியின் மகனான ராகேஷ், கெம்மண்ணு கார்மல் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்யாணபுர மிலாகிரிஸ் கல்லூரியில் படித்தார். மங்களூரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கடலே பஜில்' என்ற துளு நிகழ்ச்சியில் நடித்திருந்தார். 'பைல்வான்', 'இது எந்த லோகவய்யா' போன்ற கன்னட நாடகங்களிலும், 'பெட்கம்மி', 'அம்மேர் போலீஸ்', 'பம்மன்னே தி கிரேட்', 'உமில்', 'இல்லோக்கெல்' போன்ற துளு நாடகங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 'பலே தெலிபாலே', 'மே 22', 'ஸ்டார்', 'தூயினாயே போயே' உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார்.

44
ராகேஷ் பூஜாரி மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

'காமெடி கில்லாடிஸ்' சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளரான ராகேஷ், தனது நகைச்சுவை உணர்வால் ரசிகர்களைக் கவர்ந்தார். சின்னத்திரை மட்டுமின்றி, வெள்ளித்திரையிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். ராகேஷின் மறைவு கன்னட நாடக மேடை மற்றும் சின்னத்திரைக்கு பேரிழப்பாகும். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவுச் செய்தியால் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். ராகேஷின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நடிகை ரக்ஷிதா பிரேம், "உன்னை மிஸ் பண்றேன் மகனே.. இனி உன்னிடம் பேச முடியாது. காமெடி கில்லாடிஸ் என் மனதுக்கு நெருக்கமான நிகழ்ச்சி. நீ அதில் ஒரு பலம். உன்னைப் போன்ற அற்புதமான நபர் எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருப்பார்" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories