நாக சௌர்யாவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் தேவையற்ற செயல்கள், முறைகேடுகள் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து திடீர் என போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது, சூதாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களிடம் இருந்து ஏராளமான பணம், மொபைல் போன், பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.