நடிகர் சூர்யா:
இதுவரை அதிரடி போலீஸ்காரர், தொழிலதிபர், கிராமத்து இளைஞர் என பல அவதாரங்களில் சூர்யாவை பார்த்திருக்கிறோம். ஆனால் 'ஜெய்பீம்' படத்தில், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் வக்கீலாக சூர்யா நடித்திருக்கிறார். அவரது வெளிப்பாடுகள் மற்றும் வலுவான உரையாடல்களுக்காகவே சூர்யாவின் ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படத்தை வேண்டும். இவரது இந்த புதிய கதாபாத்திரம், ரசிகர்கள் மனதை வென்றுள்ளது என கூறினால் அது மிகையல்ல.