குறிப்பாக படத்தின் முதல் அரைமணிநேரமும், சவுண்டும் அதிகளவில் இருப்பதாக பெரும்பாலானோர் விமர்சித்தனர். ஆனால் சிலர் படமே சரியில்லை என சரமாரியாக விமர்சித்ததோடு, நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினரை கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். இதனால் படத்தின் வசூலும் பயங்கரமாக அடிவாங்கி உள்ளது. முதல் நாளில் உலகளவில் ரூ.56 கோடி வசூலித்த இப்படம், இரண்டாம் நாளில் 33 கோடி வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.