தீவிர ரசிகனாக... மாஸ்டருக்கு சல்யூட் - இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவுக்கு கமல் எழுதிய இரங்கல் கடிதம்

First Published Feb 3, 2023, 9:23 AM IST

பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு, இந்தி, தமிழ் போன்ற மொழிகளில் எண்ணற்ற வெற்றிப்படங்களை கொடுத்த மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. குறிப்பாக தமிழில் இவர் இயக்கிய சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்கள் காலம் கடந்து கொண்டாடப்படுகின்றன. இந்த இரண்டு படங்களிலுமே நாயகனாக நடித்தது கமல்ஹாசன் தான்.

தலைசிறந்த இயக்குனராக விளங்கிய கே.விஸ்வநாத், சிறந்த நடிகராகவும் திகழ்ந்தார். தமிழில் கமலின் குறுதிப்புனல், விஜய்யுடன் பகவதி, அஜித்தின் முகவரி, தனுஷுடன் யாரடி நீ மோகினி போன்ற படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். இப்படி நடிகர், இயக்குனர், ஆடியோ கிராபர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கிய கே.விஸ்வநாத் 6 முறை தேசிய விருதையும் வென்றுள்ளார்.

இதையும் படியுங்கள்... திரையுலகில் பேரதிர்ச்சி..! தாதா சாகேப் விருது பெற்ற பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் கே.விஸ்வநாத் காலமானார்!

இந்நிலையில், உடல் நலக்குறைவால் மரணமடைந்த இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவரது மறைவு இந்திய திரையுலகுக்கே பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கல் கடிதத்தில் கமல் குறிப்பிட்டுள்ளதாவது : “கலாதபஸ்வி கே.விஸ்வநாத் அவர்கள், வாழ்வின் திருவுருவத்தையும், கலையின் அழியாத தன்மையையும் முழுவதுமாக புரிந்துகொண்டவர். இதனால் அவரது படைப்புகள் காலம்கடந்து கொண்டாடப்படும். அவரது கலை படைப்புகள் என்றென்றும் வாழும். இப்படிக்கு உங்களின் தீவிர ரசிகன் கமல்ஹாசன்” என உருக்கமாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... ஓடிடி-யில் மோதலை தவிர்த்த விஜய் - அஜித்... துணிவு மற்றும் வாரிசு படங்களின் OTT ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு

click me!