தெலுங்கு, இந்தி, தமிழ் போன்ற மொழிகளில் எண்ணற்ற வெற்றிப்படங்களை கொடுத்த மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. குறிப்பாக தமிழில் இவர் இயக்கிய சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்கள் காலம் கடந்து கொண்டாடப்படுகின்றன. இந்த இரண்டு படங்களிலுமே நாயகனாக நடித்தது கமல்ஹாசன் தான்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் மரணமடைந்த இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவரது மறைவு இந்திய திரையுலகுக்கே பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.