லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் விக்ரம். அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சி உள்ளதால் படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில், விக்ரம் படத்தின் கதை இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதன்படி அதிவேகமான ஆக்ஷன் படமாக தயாராகி உள்ள இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அமர் என்கிற புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நகரில் நடக்கும் தொடர்கொலைகளை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் கமல்.
vikram movie
விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய மாஃபியா கும்பல் இருப்பதை கண்டுபிடிக்கிறார் கமல், இறுதியில் அந்த மாஃபியா கும்பலுடன் சண்டையிட்டு அதில் கமல் வென்றாரா என்பதை ஆக்ஷன் அதகளத்துடன் விக்ரம் படத்தில் சொல்லி உள்ளார்களாம். கதைப்படி கமல், அமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், விக்ரம் யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அது படத்தில் சஸ்பென்ஸாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Nayanthara : திருமண வேலைகளில் பிசி... கேன்ஸ் பட விழாவுக்கு ‘நோ’ சொன்ன நயன்தாரா