5 முறை வாலியின் வரிகளுக்கு NO சொன்ன கமல் - 6வது முறை கடுப்பில் எழுதி மெகா ஹிட்டான பாடல் எது தெரியுமா?

First Published Oct 6, 2024, 4:52 PM IST

Vaali Vs Kamal : நடிகர் கமலின் நடிப்பில் வெளியான பல படங்கள் ஹிட்டாக அதில் இடம்பெற்ற பாடல்களும் ஒரு காரணம் என்பதையும், அதற்கு காரணம் வாலி என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

Vaali vs Kamal

தமிழ் திரையுலகை பொருத்தவரை மறைந்த வாலிபக் கவிஞர் வாலி, பல மேடைகளில் பாராட்டி பேசிய வெகு சில நடிகர்களில் ஒருவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். "கோலிவுட் உலகில் கமலஹாசன் ஒருவர் தான் படத்திற்கு படம் பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார், இந்த சினிமா உலகம் இருக்கும் வரை அவருக்கு அழிவு என்பதே இல்லை" என்று புகழாரம் சூட்டி இருக்கிறார் வாலி. இளையராஜா மற்றும் கமலஹாசன் காம்பினேஷனில் பல மெகா ஹிட் திரைப்படங்கள் உருவாகி இருக்கிறது. அதில் ஏறத்தாழ 60% திரைப்படங்களுக்கு பாடல் ஆசிரியராக பணியாற்றியவர் வாலி தான். வாலி மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் ஒரு பாடலை உருவாக்கும் முன்பு அதற்காக மிகப்பெரிய மெனக்கடல்களை எப்பொழுதும் செய்வது உண்டு.

Vijay Sethupathi : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய 2 ரியாலிட்டி ஷோக்களின் கதை என்ன ஆச்சு தெரியுமா?

Lyricist Vaali

அதேபோல கமலஹாசனுக்கு முன்பாக கவிஞர் வாலி மிகப்பெரிய அளவில் நட்பு பாராட்டியது மறைந்த முதல்வரும், நடிகருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் தான். கடந்த 1970ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான "எங்கள் தங்கம்" என்கின்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி பாடல்களை எழுதி இருக்கிறார். அந்த திரைப்படத்திற்காக தான் முதல் முதலில் வாலிக்கு தமிழக அரசு வழங்கும் மாநில விருது கிடைத்தது. அதன்பிறகு "இவர்கள் வித்தியாசமானவர்கள்" மற்றும் "வருஷம் 16" போன்ற திரைப்படங்களில் எழுதிய பாடல்களுக்காகவும் தமிழக அரசு வழங்கும் மாநில விருதை வென்றிருக்கிறார் வாலி. 

அந்த வரிசையில் கடந்த 1989ம் ஆண்டு பிரபல நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இளையராஜா இசையில் உருவான "அபூர்வ சகோதரர்கள்" திரைப்படத்தில் பாடல்களை எழுதியதற்காகவும் தமிழக அரசு வழங்கும் மாநில விருதை வாலி வென்றிருக்கிறார். அதன் பிறகு "கேளடி கண்மணி" திரைப்படத்திற்காக அதே விருதை வென்ற வாலி, இறுதியாக கடந்த 2008ம் ஆண்டு மீண்டும் கமலஹாசன் நடிப்பில், பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான "தசாவதாரம்" திரைப்படத்தில் பாடல்களை எழுதியதற்காக தமிழக அரசு வழங்கும் மாநில விருதை வென்றுள்ளார்.

Latest Videos


Hey Ram

அவர் பெற்ற ஐந்து தமிழக அரசின் மாநில விருதுகளில் இரண்டு விருதுகள் கமல்ஹாசனின் திரைப்படங்களுக்காக கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007ம் ஆண்டு கவிஞர் வாலிக்கு "பத்மஸ்ரீ" பட்டமும் வழங்கப்பட்டது. தன்னுடைய வாழ்நாளில் "அம்மா", "அவதார புருஷன்", "நானும் இந்த நூற்றாண்டும்", "பாண்டவர் பூமி", "ராமானுஜ காவியம்", "கிருஷ்ண காவியம்", "தமிழ் கடவுள்", "கலைஞர் காவியம்" என்று பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதி அசத்தியவர் பாலி என்றால் அது மிகையல்ல.  

பொதுவாக பாடல் ஆசிரியர்கள் பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள். ஆனால் ஒரு பாடலாசிரியராக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய வாலி, கடந்த 1983ம் ஆண்டு தமிழில் வெளியான "பொய்க்கால் குதிரை" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் "சத்யா" மற்றும் "ஹேராம்" உள்ளிட்ட திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று அவர் நடித்திருந்தார். அதன்பிறகு கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "பார்த்தாலே பரவசம்" என்ற திரைப்படத்திலும், 2002 ஆம் ஆண்டு வெளியான "காதல் வைரஸ்" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் அவர் ஏற்று நடத்திருந்தார்.

Unna Nenachen Song

இப்படிப்பட்ட சூழலில் தான் கடந்த 1989ம் ஆண்டு பிரபல நடிகர் கமல்ஹாசன் மூன்று வேடங்களில் நடித்து அசத்திய "அபூர்வ சகோதரர்கள்" என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் வந்த அனைத்து பாடல்களையும் எழுதியது வாலி தான். அது மட்டுமல்ல இந்த திரைப்படத்திற்கான பாடல்களை அமைக்கும் பொழுது பல நேரங்களில் கமல்ஹாசன் வாலியை படாத பாடு படுத்தி இருக்கிறார் என்றே கூறலாம். குறிப்பாக "ராஜா கைய வச்சா" பாடலுக்காக மிகப்பெரிய அளவில் வாலியை டார்ச்சர் செய்த கமல், அதே திரைப்படத்தில் வரும் "உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்" என்கின்ற பாடலுக்காகவும் மிகப்பெரிய அளவில் அவரை பாடாய் படுத்தியிருக்கிறார். 

இது முழுக்க முழுக்க காதல் தோல்வியை சொல்லும் பாடலாக இருக்க வேண்டும், ஆனால் அந்த தவறு தன்னுடையது என்பதை நாயகன் உணர்ந்தே அந்த பாடலை பாடுகிறான். இதில் யாரையும் அவன் காயப்படுத்த விரும்பவில்லை, தன்னுடைய இயலாமையை நினைத்தும் அவன் வருத்தப்பட வேண்டும். என்று பல விஷயங்களை வாலியிடம் கூற, அவரும் வரிகளை எழுதி தள்ளியுள்ளார். சுமார் 5 முறை அவர் கொடுத்த வரிகளுக்கு கமல் நோ சொல்ல, 6வது முறையாக கொடுத்த வரிகளை தான் கமல் ஓகே செய்தாராம். அந்த 6வது வரிகளை கொடுக்கும்போது, இதுதான் கடைசி, இனி என்னால் எழுதமுடியாது, என்று கோபத்துடன் அந்த வரிகளை கொடுத்தாராம். அந்த பாடல் தான் இன்றளவும் சூப்பர் ஹிட் பாடலாக வலம்வருகின்றது.

வேற ஆளே கிடைக்கலயா பாஸ்! பிக்பாஸ் 8-ல் விஜய் டிவி பிரபலங்கள் மட்டும் இத்தனை பேரா?

click me!