கடந்த 20 ஆண்டுகளில் இந்திய சினிமாவின் பரிணாம வளர்ச்சி மிகப்பெரிய உச்சத்தை கண்டுள்ளது என்றே கூறலாம். குறிப்பாக மேக்அப் எனப்படும் ஒப்பனை என்று வரும்போது, அதில் புகைத்தப்படும் நுணுக்கங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. குறிப்பாக கமலின் "அவ்வை சண்முகி", ரித்திக் ரோஷனின் "தூம் 2" மற்றும் அமிதாப் பச்சனின் "பா" போன்ற படங்களில் அதில் இடம்பெற்ற ஒப்பனைக்காகவே பெரிய அளவில் பேசப்பட்டது. வெளிநாட்டில் மிகவும் பிரபலமான Prosthetic என்ற ஒரு வகை மேக்அப், மேற்கூறிய அனைத்து படங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கமலின் அவ்வை சண்முகி.. 1993ம் ஆண்டு ஹாலிவுட் உலகில் வெளியான ஒரு திரைப்படத்தின் லேசான தழுவல் தான் கடந்த 1996ம் ஆண்டு தமிழில் வெளியான அவ்வை ஷண்முகி. தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி அந்த படம் தான் இந்திய சினிமாவில் முதல் முறையாக, ப்ரோஸ்தெடிக் மேக்கப் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்ட ஒரு படம் என்று கூறப்படுகிறது. தனது மகளின் பாசத்திற்காக ஏங்கும் தந்தை, பெண்ணாக வேடமிட்டு அந்த குழந்தையோடு நேரத்தை கழிப்பதை போன்ற ஒரு கதை அது.
இந்த படம் வெளியான பிறகு பல ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் இந்த வகை ப்ரோஸ்தெடிக் மேக்கப் பயன்படுத்தப்பட்டது. அது குறித்து பின்வருமாறு பார்க்கலாம், ஆனால் அவ்வை ஷண்முகி படம் வெளியாவதற்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே அதை கமல்ஹாசன் ஒரு படத்தில் சோதித்தும் பார்த்துள்ளார் அந்த படம் குறித்தும் இந்த பதிவில் காணலாம்.
ஜெயம் ரவியை விட மூன்று மடங்கு கோடீஸ்வரியாக வாழும் அவரின் மனைவி ஆர்த்தி யார் தெரியுமா?