BiggBoss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதன் டைட்டிலை வெல்ல நிரூப், பாலா, தாமரை, ரம்யா பாண்டியன் ஆகிய 4 போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடிக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்டு வருகிறது. சிம்பு தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. 70 நாட்கள் மட்டுமே நடத்தப்பட உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இறுதிவாரத்தில் அபிராமி, ஜூலி, ரம்யா பாண்டியன், தாமரை, பாலா, நிரூப் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
24
இதில் 3 பேர் மட்டுமே பைனல்ஸ் மேடையை எட்ட முடியும், அதனால் எஞ்சியுள்ளவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் அபிராமி வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்றும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு உள்ளார். இதற்காக எஞ்சியுள்ள 5 போட்டியாளர்களும் கண்ணைக்கட்டி ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
34
இதிலிருந்து ஜூலி மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார். மற்ற 4 போட்டியாளர்கள் எவிக்ஷனில் இருந்து தப்பித்தனர். பைனல்ஸ் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஜூலி திடீரென வெளியேறியது அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. பைனல்ஸுக்கு செல்ல முடியாததால் கண்ணீருடன் விடைபெற்றார் ஜூலி.
44
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதன் டைட்டிலை வெல்ல நிரூப், பாலா, தாமரை, ரம்யா பாண்டியன் ஆகிய 4 போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் பாலா வெல்ல அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது நடக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.