டெல்லியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பண மோசடி செய்த் வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்தாண்டு கைது செய்தனர். அவர் தொழிலதிபரின் மனைவியை மிரட்டி பறித்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதையடுத்து நடிகை ஜாக்குலினும் இந்த வழக்கின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி, சுகேஷிடம் இருந்து அவர் பெற்ற பரிசுகள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதன்பின்னர் அவருக்கு சொந்தமான ரூ.7.27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், அவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்த்தனர்.