இன்னும் அந்த விஷயமே அடங்காத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கானா இசை பாடகியும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பாடகியுமான இசைவாணி சபரிமலை ஐயப்பன் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பாடல்களை பாடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிரபல இயக்குனர் ரஞ்சித் தலைமையில் சில ஆண்டுகளுக்கு முன்பு "கேஸ்ட்லெஸ் கலெக்ஷன்ஸ்" என்கின்ற இசை குழு ஆரம்பிக்கப்பட்டது. இதில் தான் ஒரு முக்கிய பாடகியாக இசைவாணி திகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.