இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், இந்த படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும், சுமார் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. எனவே இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.