பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருகிறதா? இயக்குனர் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

First Published Feb 18, 2021, 11:29 AM IST

இதுநாள் வரை கண்ணம்மாவை தேடி அலைந்த சௌந்தர்யா கண்ணம்மாவை பார்த்து விட்டதால், இனி இந்த சீரியல் முடிய உள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வந்தது. இதையடுத்து, பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட், எப்போது சீரியல் முடிவுக்கு வரும் என்கிற தகவலை கூறியுள்ளார்.

இதுநாள் வரை கண்ணம்மாவை தேடி அலைந்த சௌந்தர்யா கண்ணம்மாவை பார்த்து விட்டதால், இனி இந்த சீரியல் முடிய உள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வந்தது. இதையடுத்து, பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்டென்ட், எப்போது சீரியல் முடிவுக்கு வரும் என்கிற தகவலை கூறியுள்ளார்.
undefined
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.
undefined
இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ரோஷினி. மாடல் அழகியான இவர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார்.
undefined
சில மாதங்களுக்கு முன், கர்ப்பிணியான கண்ணம்மா வீட்டை விட்டு விரட்டப்பட்டு கையில் பையுடன் ரோடு ரோடாக சுற்றும் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்தனர். ஆனால் அந்த மீம்ஸ்கள் அனைத்தும் வேற லெவலுக்கு ட்ரெண்டாகி சீரியலையும் ரோஷினியையும் மேலும் பிரபலமடைய வைத்தது.
undefined
தற்போது தைரியமான பெண்ணாக தனது குழந்தையை வளர்க்க போராடும் கண்ணம்மாவின் கதாபாத்திரம் இல்லத்தரசிகளை வெகுவாக கவர, சீரியலும் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.
undefined
மேலும், கண்ணம்மாவை அவரது மாமியார் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், கண்ணம்மாவின் இரட்டை குழந்தைகளில் ஒருவரான ஹேமா... சமையல் ஆண்டியாக நினைத்து, தை பூசத்திற்கு சமைக்க பெற்ற தாய் கண்ணம்மாவையே அழைத்து வருகிறார்.
undefined
எதிர்பாராத விதமாக கண்ணம்மாவை சௌந்தர்யா சந்தித்தாலும், குழந்தை முன் உண்மையை கூறாமல் மறைத்தார். இதுபோன்ற காட்சிகள் 'பாரதி கண்ணம்மா' சீரியலை மேலும் சுவாரஸ்யமாக்கி உள்ளது.
undefined
மேலும் இதுநாள் வரை கண்ணம்மா மீது, அளவில்லாத கோவத்தை காட்டிய பாரதி உடல்நிலை முடியாமல் கண்ணம்மா கஷ்டப்பட்ட போது தன்னுடைய பணத்தை செலவு செய்து காப்பாற்றினார். ஹேமா பாரதியின் குழந்தை தான் என, வெண்பா DNA டெஸ்ட் எடுத்து வைத்துள்ளது பாரதியின் கண்களில் பட்டால்... கண்ணம்மா நல்லவள் என்கிற உண்மை அவருக்கு தெரிந்துவிடும்.
undefined
எனவே ஒவ்வொரு நாளும் பாரதியும் கண்ணம்மாவும் வாழ்க்கையில் நெருங்கி வரும் காட்சிகள் கட்டப்பட்டு வருகிறது. அதற்க்கு ஏற்ற போல், இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட்... 'பாரதியும் கண்ணம்மாவும்' சேர்த்தால் இந்த சீரியல் முடிவடைந்து விடும் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எனவே ரசிகர்கள் யூகித்தது போல் விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இதிலும் ஏதாவது ட்விட்ஸ்ட் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
undefined
click me!