எனக்காக கட்டிய கோவிலை இதற்காக பயன்படுத்துங்கள்...! நடிகை நிதி அகர்வால் பரபரப்பு அறிக்கை..!

First Published Feb 18, 2021, 10:41 AM IST

நடிகை நிதி அகர்வால், ரசிகர்கள் தனக்காக கட்டிய கோவிலை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என கூறி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

'முன்னா மைகேல்' என்கிற பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால்.
undefined
இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா, அகில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
undefined
பின்னர் தமிழில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'பூமி' மற்றும் சிம்புவுக்கு ஜோடியாக 'ஈஸ்வரன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.
undefined
இந்த இரண்டு படங்களுமே பொங்கல் திருவிழா அன்று வெளியாகி... இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.
undefined
இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
undefined
இவர் நடிப்பில் முழுசாக மூன்று படங்கள் கூட தமிழில் இன்னும் வெளியாகாத நிலையில்... இவருக்கு சென்னையில் உள்ள ரசிகர்கள் கோவில் காட்டியுள்ளது, ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.
undefined
அச்சு அசல்... நிதி அகர்வால் போலவே சிலை அமைத்து, அதற்க்கு பாலபிஷேகம், கற்பூர தீபாராதனை என அதகளம் செய்துள்ளனர் ரசிகர்கள். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
undefined
இந்த தகவலை சோசியல் மீடியாக்கள் மூலம் தெரிந்து கொண்ட நிதி அகர்வால், இதனை ரசிகர்கள் தனக்கு கொடுத்த காதலர் தின பரிசாகவே பார்ப்பதாகவும், அவர்களது அன்புக்கு மெய் சிலிர்க்க நன்றி கூறினார்.
undefined
இதை தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் நிதி அகர்வால் வெளியிட்டுள்ளார். அதில், ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அளவில்லாத அன்பை பார்த்து நெகிழ்ந்து போய் விட்டேன் . அவர்களுக்கு எப்போதும் நான் ஆதரவாக இருப்பேன். என் ரசிகர்கள் எனக்காக கட்டியிருக்கும் கோவிலை ஏழைகளின் இருப்பிடம் , உணவு அளிப்பதற்கும் மற்றும் கல்விக்காக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்'. இவரது இந்த வேண்டுகோளுக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
undefined
click me!