குடிபோதையில் ஸ்ரீதேவி ரூமுக்குள் நுழைய முயன்ற பிரபல நடிகர்... ஓட்டலில் நடந்த கலாட்டா...!

First Published Jul 17, 2020, 7:29 PM IST

இந்திய திரையுலகின் முடிசூடா ராணியாக வலம் வந்த ஸ்ரீதேவி இந்தி திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வந்த போது நடந்த சம்பவம் ஒன்று தற்போது பேசப்பட்டு வருகிறது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் இதயத்தில் கொள்ளை கொண்டவர் ஸ்ரீதேவி.
undefined
கடந்த 2018ம் ஆண்டு உறவினரின் திருமணத்திற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி, அங்கிருந்த ஓட்டலில் தங்கியிருந்த போது குளியல் தொட்டியில்மூழ்கி உயிரிழந்தார்.
undefined
இந்த துக்கமான சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டாலும் ஸ்ரீதேவியை அவரது குடும்பத்தினரும், ரசிகர்களும் இன்றளவு மறக்கவில்லை.
undefined
அழகிலும் நடிப்பிலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட ஸ்ரீதேவிக்கு சாமானியர்கள் மட்டுமல்ல திரைப்பிரபலங்களும் ரசிகர்களாக இருந்தனர்.
undefined
அப்படி பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சஞ்சய் தத்தும் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகராம்.
undefined
ஜிதேந்திராவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடிப்பில் 1983ம் ஆண்டு வெளியான ஹிம்மத்வாலா என்ற திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.
undefined
அந்த பட ஷூட்டிங் நடந்த இடத்திற்கு அருகில் தான் பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் பட ஷூட்டிங்கும் நடந்துள்ளது.
undefined
அப்போது ஒரே ஊரில் ஸ்ரீதேவி இருப்பதை அறிந்த சஞ்சய் தத் அவரை நேரில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஏனென்றால் சஞ்சய் அதுவரை ஸ்ரீதேவியை நேரில் பார்த்தது கிடையதாம்.
undefined
அதனால் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்ற சஞ்சய் ஸ்ரீதேவி ரூம் கதவை வேகமாக அடித்துள்ளார்.
undefined
திறந்து பார்த்த ஸ்ரீதேவிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி பாலிவுட்டின் டாப் ஸ்டார் தனது ரூம் வாசலில் நிற்பதை கண்டு ஆடிப்போனார். ஆனால் சஞ்சய் தத் அப்போது பயங்கர குடிபோதையில் இருந்தது அவரை பீதியடையச் செய்தது.
undefined
ஸ்ரீதேவியின் பயத்தை புரிந்து கொள்ளாத சஞ்சய் தத், அவருடைய அறைக்குள் நுழைய முயன்றுள்ளார். இதனால் வெளவெளத்து போன ஸ்ரீதேவி படார் என அறை கதவை சாத்திவிட்டாராம்.
undefined
இதை பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்துள்ள சஞ்சய் தத், அன்று போதையில் நான் ஸ்ரீதேவியிடம் எப்படி நடந்துகொண்டேன் என நியாபகம் இல்லை என கூறியுள்ளார்.
undefined
click me!