பிரபல நடிகை மோகினி இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். நடிகர் சிவசுப்பிரமணியம் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தை பொருத்தவரை பெரிய அளவில் நடிகர் நடிகைகள் இல்லாத நிலையிலும் கூட, இந்த படம் மெகா ஹிட் ஆனது. காரணம் இந்த திரைப்படத்தில் ஒலித்த ஏழு பாடல்கள் தான். "அதோ மேக ஊர்வலம்", "கலகலக்கும் மணியோசை", "தென்றல் காற்றே வா வா" போன்ற பாடல்கள் காலம் கடந்து இன்றும் பெரிய அளவில் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் கே.ஆர் அவர்களை ஒரு நாள் காலை இளையராஜா அழைக்க, அவரும் அங்கு சென்று இருக்கிறார். அப்பொழுது காலை 6 மணி கே.ஆர் இளையராஜாவை சந்திக்க சென்ற வெகு சில நிமிடங்களில் அப்படத்தின் ஏழு பாடல்களுக்கான இசையை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.