அந்த வகையில் தளபதி படத்தில் இடம்பெறும் சின்னத்தாய் அவள் என்கிற எமோஷனல் பாடலை வாலி தான் எழுதி இருந்தார். இந்த பாடல் வரிகளை பார்த்து தான் இளையராஜா கண்கலங்கி இருக்கிறார். அதற்கு காரணம் இளையராஜாவை போற்றி அதில் இடம்பெற்ற வரிகள் தான்.
இளையராஜாவின் அம்மா பெயர் சின்னத்தாய். அவர் தந்த ராசாவே என இளையராஜாவை குறிப்பிட்டு வாலி அந்த வரிகளை எழுதி இருந்தார். இதுமட்டுமின்றி ராஜாவின் புகழ் பாடும் விதமாக ‘ராஜா கையவச்சா அது ராங்கா போனதில்லே’, ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’, ‘ராஜாவுக்கு ராஜா நான் தான்’ என பல சூப்பர்ஹிட் பாடல்களையும் இளையராஜாவுக்காக எழுதி இருக்கிறார் வாலி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... விவாகரத்தை வில்லங்கமாக்கிய அமைச்சர்; லெப்ட் ரைட் வாங்கிய சமந்தா; சப்போர்ட்டுக்கு வந்த நாக சைதன்யா!