சிம்பொனி சர்ச்சை; புயலை கிளப்பிய இளையராஜா; பதறிப்போய் விளக்கம் கொடுத்த லிடியன் நாதஸ்வரம்!

Published : Mar 12, 2025, 07:48 AM IST

சிம்பொனி இசை விவகாரத்தில் இசைஞானி இளையராஜாவும், லிடியன் நாதஸ்வரமும் மாறி மாறி விளக்கம் கொடுத்துள்ளதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
சிம்பொனி சர்ச்சை; புயலை கிளப்பிய இளையராஜா; பதறிப்போய் விளக்கம் கொடுத்த லிடியன் நாதஸ்வரம்!

Ilaiyaraaja vs Lydian nadhaswaram Symphony Controversy : சிம்பொனி இசை தான் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டு மக்களிடையே ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. இதற்கு காரணம் இளையராஜா தான். அவர் தன்னுடைய முதல் சிம்பொனி இசையை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் அரங்கேற்றம் செய்தார். உலகளவில் மொசார்ட், பீத்தோவன் போன்ற ஜாம்பவான்கள் வரிசையில் சிம்பொனி இசையை அரங்கேற்றி வரலாறு படைத்தார் இசைஞானி இளையராஜா. அதுவும் இந்த சிம்பொனி இசையை வெறும் 35 நாட்களில் உருவாக்கினாராம் இளையராஜா.

24
Ilaiyaraaja Symphony

லண்டனில் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றியதும் அங்கு குவிந்திருந்த ரசிகர்கள் எழுந்து நின்று அவருக்கு கைதட்டி ஆரவாரம் செய்ததால் நெகிழ்ச்சி அடைந்த இளையராஜா மேடையில் இருந்தபடியே அனைவருக்கும் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார். சிம்பொனி இசையை அரங்கேற்றிய கையோடு, லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... என் சிம்பொனி இசையை நீங்கள் பதிவிறக்கம் செய்து கேட்கக்கூடாது - இளையராஜா இப்படி சொல்லிட்டாரே!

34
Ilaiyaraaja

இளையராஜாவைப் போல் தானும் சிம்பொனி இசையை வெளியிட இருப்பதாக அவரிடம் இசைப் பயின்ற மாணவனும், இசைக் கலைஞருமான லிடியன் நாதஸ்வரம் சமூக வலைதளங்களில் கூறி இருந்தது வைரல் ஆனது. அதேபோல் இளையராஜா, லிடியனின் சிம்பொனி இசைக்கு உதவியதாகவும் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில், இதுபற்றி இளையராஜாவிடமே கேட்கப்பட்டது, அதற்கு அவர், லிடியன் என்னிடம் இசை கற்க வந்தவர். ஒரு முறை தான் சிம்பொனி இசையை உருவாக்கி இருப்பதாக சொல்லி போட்டுக்காட்டினார். 20 விநாடி கேட்டதும், இது என்ன சினிமா பின்னணி இசை மாதிரி இருக்கு. இது தப்பாச்சே... இது சிம்பொனியே இல்லை. முதலில் முறையாக சிம்பொனி என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு கம்போஸ் செய் என்று சொன்னதாக இளையராஜா கூறினார்.

44
Lydian Nadhaswaram

இதனால் பதறிப்போய் லிடியனும் விளக்கம் கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இளையராஜா அங்கிள் என்னுடைய குரு. அவர் சொன்னது உண்மை தான். சிம்பொனி பற்றி அவரிடம் நிறைய பேசி இருக்கிறேன். அப்போது நீயும் கற்றுக்கொண்டு முறையாக சிம்பொனி இசையை அரங்கேற்றி நிறைய விருதுகளை பெற்று பெற்றோருக்கு பெருமை சேர் என்று என்னிடம் சொன்னார். அவர் எப்போது ஹானஸ்ட் ஆனவர். மனதில் எதையும் வைத்துக் கொண்டு பேசமாட்டார். வெளியில் அப்படி தெரிந்தாலும் அவர் உண்மையில் அப்படி இல்லை என லிடியன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... இசை வெள்ளத்தில் மூழ்கிய லண்டன்; சிம்பொனியை அரங்கேற்றினார் இளையராஜா - வைரலாகும் வீடியோ

Read more Photos on
click me!

Recommended Stories