அமிதாப் பச்சன் குடும்பத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி?... பகீர் கிளப்பும் தகவல்...!

First Published Jul 13, 2020, 5:45 PM IST

அமிதாப் பச்சன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று எவ்வாறு பரவியிருக்க கூடும் என்ற காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. 

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கும், அவருடைய மகனும் முன்னணி நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி கடந்த 11ம் தேதி உறுதி செய்யப்பட்டது.
undefined
இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பரிசோதனையிலும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
undefined
இந்த செய்தி பாலிவுட்டை மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் உறையவைத்தது. இந்நிலையில் அமிதாப் பச்சன் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
undefined
இதனிடையே முதலில் ஐஸ்வர்யா ராய் அவருடைய மகளான ஆராத்யா ஆகியோருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்தன. இதனால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
undefined
ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் ஆராத்யா ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
undefined
ஜெயா பச்சனுக்கு மட்டுமே தொற்று இல்லை என்பது திட்டவட்டமாக நிரூபணமானது. இதில் அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
undefined
இதையடுத்து அமிதாப் பச்சனுக்கு சொந்தமான 4 பங்களாக்களும் சீல் வைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அங்குள்ள பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
undefined
ஐஸ்வர்யா ராய் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதற்கு காரணம் ஐஸ்வர்யா ராய் உடலில் தொற்றின் தீவிரம் குறைவாக இருப்பது தான் எனக்கூறப்படுகிறது.
undefined
ஆனால் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் உடலில் தொற்றின் தாக்கம் அதிகமிருப்பதால் தான் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
undefined
இதனிடையே அபிஷேக் பச்சன் தான் நடித்த வெப் சீரிஸ் டப்பிங் பணிகளில் பங்கேற்க அடிக்கடி ஸ்டுடியோ சென்று வந்துள்ளார். அங்கிருந்து தான் அவருக்கு தொற்று பரவியிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
undefined
click me!