நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செரிமான பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறதாம்.
இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் ரஜினிக்கு இசிஜி, எக்கோ உள்ளிட்ட இருதயவியல் பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும், தேவைப்படும் பட்சத்தில் ஆஞ்சியோவைவிட அதிநவீன பரிசோதனையும் மேற்கொள்ள மருத்துவ குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ரஜினியின் உடல் நிலை சீராக உள்ளதாம். இதனிடையே இதற்கு முன்னர் ரஜினிகாந்த் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.