Published : Aug 03, 2023, 08:34 PM ISTUpdated : Aug 03, 2023, 10:24 PM IST
இயக்குனர் பாலாவின் மனைவி மலர், அரசியல்வாதி ஒருவருடன் உள்ள உறவின் காரணமாக, பாலாவை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இதுகுறித்த தகவலை காயத்திரி என்பவர் புட்டு புட்டு வைத்துள்ளார்.
MP ரவீந்தர்நாத், தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசுவதாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய காயத்ரி தேவி, தற்போது பிரபல ஊடகம் ஒன்றில், ஓபி ரவீந்தர்நாத் மற்றும் பாலா மனைவி மலருக்கும் இடையே இருந்த உறவு குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
26
இந்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து காயத்திரி தேவி பேசியுள்ளார். MP ஓபி ரவீந்திரநாத் எங்களுக்கு குடும்ப நண்பர். கொடைக்கானலில் பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே தெரியும். கடந்த 10 வருடங்களாக எனக்கு நல்ல குடும்ப நண்பர். அதே போல் அவரின் மனைவி ஆனந்தியும் எனக்கு மிகவும் நெருக்கமானவர். எந்த ஒரு குடும்ப பிரச்சனை என்றாலும்... அதுபற்றி என்னிடம் அவர்கள் பேசுவது வழக்கமான ஒன்று தான் என கூறியுள்ளார் .
பாலாவின் மனைவி மலர், ஆனந்தி, நான் எல்லோரும் நல்ல நண்பர்கள். ஆனால் எங்களுக்கே தெரியாமல் எப்படியோ ரவீந்தர்நாத்துக்கும் - மலருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டு விட்டது. ஒரு நிலையில் மலர் பணத்துக்காக அபாஷன் செய்வது போல், மருத்துவமனையில் இருந்து கொண்டு நடித்தது மட்டும் இன்றி, என்னையும் அவருக்கு ஆதரவாக, ரவீந்தர்நாத்திடம் பேச சொன்னார். அவர் நடிப்பதை அறிந்ததும் எனக்கு அவர் மேல் இருந்த, மரியாதை போய் விட்டது. இனி உன்னுடைய நட்பே வேண்டாம் என மலரிடம் இருந்து விலகி விட்டேன். இதுபற்றி ரவீந்தரநாத்திடமும்... அண்ணா மலர் உங்களை ஏமாற்றுவதற்காக நடிக்கிறார் என கூறினேன்... அதற்க்கு பிறகு தான் எனக்கு பிரச்சனை வர துவங்கியது என காயத்ரி தேவி கூறியுள்ளார்.
46
கடந்த ஆண்டு, ரவீந்தர்நாத் போனில் இருந்து, யாரோ ஒருவர் போன் செய்து... ஃபுல் போதையில் என்னிடம் தவறாக பேசினார். ரவீந்தருக்கு என்னை பிடிக்கும் என கூறினார். இதுகுறித்து நான் ரவீந்தரின் மனைவியிடம் கூறியபோது, யாராவது அவருக்கே தெரியாமல் பேசி இருக்கலாம் என கூறியதால் இந்த விஷயத்தை நான் பெரிதாக்கவில்லை. அதே நேரம் வாய்ஸ் மெசேஜ் மூலம் அவருக்கு தெரியப்படுத்தியிருந்தேன்.
இதை தொடர்ந்து, ஒருநாள் அவரே மிகவும் ஆபாசமாக என்னிடம் பேசினார். நான் அண்ணன் என்று தான் அவரை கூப்பிடுவேன். ஆனால் இவர் இப்படி பேசியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "அப்போது நான் பணத்துக்காக எதையும் செய்யுறவ நான் கிடையாது. இப்படி தான் வாழவேண்டும் என வாழ்பவள் நான்... என மெசேஜ் கொடுத்தேன். ஆனால் அவர் எல்லை மீறும் விதத்தில்... நீ வந்தே ஆகணும், நான் வண்டிய எடுத்துட்டு வரேன் என கொச்சையாக பேசியதால் இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை வந்துள்ளதாக காயத்திரி தேவி கூறியுள்ளார்.
66
காயத்ரி தேவியின் கிளப்பி இருக்கும் பரபரப்பு, வேண்டும் என்றே சிலர் தூண்டுதலில் பெயரில் செய்கிறார் என்றும், பணத்துக்காக இப்படி செய்கிறார் என... விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், என்னுடைய போனில் அணைத்து ஆதாரங்களும் உள்ளது. அதையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உள்ளேன் போலீஸ் விசாரணைக்கு பின்னர் உண்மை வெளியே வரும் என காயத்ரி பேசியுள்ளது ... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.