ஹைக்கூ கவிதை வரிகளால்... வித்யாசாகர் இசையில் உருவான முதல் சூப்பர் ஹிட் பாடல்! எது தெரியுமா?

Published : Sep 14, 2024, 04:12 PM IST

கபிலரின் ஹைக்கூ வரிகளுக்கு மெட்டமைத்து, இசையமைப்பாளர் வித்யா சாகர் உருவாக்கிய ஒரு சூப்பர் ஹிட் பாடல் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.  

PREV
14
ஹைக்கூ கவிதை வரிகளால்... வித்யாசாகர் இசையில் உருவான முதல் சூப்பர் ஹிட் பாடல்! எது தெரியுமா?
Vidyasagar Music

ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் என்றால் அதில் பாடல்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு திரைப்படத்தின் கதையை எழுதி முடித்தபின்னர்.. இயக்குனர் அதிகம் கவனம் செலுத்துவது பாடல்களுக்காக தான். காரணம் சில சமயங்களில் படங்களில் இடம்பெறும் பாடல்கள் தான் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும். எனவே தான் தயாரிப்பாளர்கள் பாடல்கள் மற்றும் இசையமைப்பாளர் விஷயத்தில் இயக்குனர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ஏன் அறிவுறுத்துவது உண்டு.
 

24
Kabilan Lyrics

ஒரு பாடல் கவிதை துவத்துடன், சரணம்... பல்லவியுடன் இருக்க வேண்டும் என்று தான் நாம் கேள்வி பட்டிருப்போம். அப்படி தான் இசையமைப்பாளர்கள் பாடல்களை இசையமைப்பாளர்களிடம் எழுத சொல்வார்கள். ஆனால் இசையமைப்பாளர் வித்யாசாகர் கொஞ்சம் வித்தியாசமாக, ஹைக்கூ ஸ்டைலில் இயக்குனர் கபிலனிடம் பாடலை வாங்கி அதனை சூப்பர் ஹிட் வெற்றி பாடலாகவும் மாற்றியுள்ளார்.

8 நாளில் 'ஜெயிலரை' அலறவிட்ட... தளபதின் 'கோட்' பட வசூல்! எத்தனை கோடி தெரியுமா?

34
Karu Pazhaniyappan Directing Parthiban Kanavu Movie

அதிலும் குறிப்பாக, கபிலன் ஹைக்கூ ஸ்டைலில் எழுதிய பாடலுக்கு... தன்னுடைய அற்புதமான இசையால் உயிர் கொடுத்திருந்தார் வித்யா சாகர். அந்த பாடல் தான் 'ஆலம் குயில்... கூவும் ரயில் பாடல்.

என்ன தவம் செய்தனை யசோதா... என்கிற சரணத்துடன் இந்த பாடல் துவங்கினாலும், இதில் கணவன் - மனைவியிடம் நடக்கும் உரையாடலை மிகவும் நேர்த்தியாக... ஹைக்கூ கவிதைகளாய் ரசிக்க வைத்திருப்பார்.

44
Haiku Style Pottery Song

செல்ஃபோன்

இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது,
தொலைவிலும் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே.

சிகரெட்

விரல்களின் இடையே ஒரு விரல் போல,
சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல்.

 வெட்கம்

இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான்.

மீசை

இது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான்.
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!

திருக்குறள்:

இருவரிக் கவிதை ஒரு பொருள் தருமே,
இருவரும் இது போல இருந்தால் சுகம்.

நிலா:

இரவினில் குளிக்கும் தேவதை இவளோ,
வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல்.

கண்ணாடி

இதில் என்னைப் பார்க்கிறேன், அது உன்னைக் காட்டுதே!

காதல்

நம் நான்-கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவடா!

என இந்த பாடலை அழகு படுத்தி இருப்பார்கள் கபிலன் மற்றும் வித்யா சாகர். மேலும் இந்த பாடலின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது, ஹரிணியின் குரல். இதற்கு முன் எந்த ஒரு பாடலும், இப்படி ஒரு ஹைக்கூ ஸ்டைலில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு பார்ட்டியால் கிடைத்த பட வாய்ப்பு; திருமணமான நடிகரின் தொடர்பால் கேரியரை இழந்து காணாமல் போன தமிழ் நடிகை!
 

click me!

Recommended Stories