2010-ஆம் ஆண்டு, நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இயக்குனர் நலன் குமாரசுவாமி இயக்கிய 'நடந்தது என்ன' என்கிற குறும்படத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளை பெற்ற கருணாகரன்... அடுத்தடுத்து சுமார் 5-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்தார். மேலும் 2012-ஆம் ஆண்டு இவரை சுந்தர் சி தான் இயக்கிய, காமெடி ஜார்னர் திரைப்படமான 'கலகலப்பு' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், காமெடியனாக நடிக்க வைத்தார். இதைத்தொடர்ந்து பீட்சா, மாலைப்பொழுது மயக்கத்திலே, சூது கவ்வும், தீயா வேலை செய்யணும் குமாரு, யாமிருக்க பயமேன், ஜிகர்தண்டா, யான், லிங்கா, கப்பல், என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.