அந்த ஹீரோவுக்காக அதிரடி முடிவெடுத்த தமன்னா... ஒரு எபிசோட்டிற்கு இத்தனை லட்சம் சம்பளமா?

First Published Jun 30, 2020, 5:46 PM IST

கைவசம் எந்த பட வாய்ப்புகளும் இல்லாததால் பிரபல நடிகை தமன்னா ஓடிடி தளம் ஒன்றில் டாக் ஷோ ஒன்றை தொகுத்து வழங்க உள்ளாராம். 
 

தமிழில் தமன்னா கைவசம் தற்போது எந்த படமும் இல்லை. தெலுங்கில் அவர் நடித்த “தட் இஸ் மகாலட்சுமி” என்ற படமும் பல மாதங்களுக்கு முன்பே முடிந்து வெளியாகமல் உள்ளது. இப்படி பட வாய்ப்புகளே இல்லாமல் போனதால் தமன்னா அதிரடி முடிவெடுத்துள்ளார்.
undefined
அதாவது தெலுங்கில் உள்ள ஓடிடி தளத்தின் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க முடிவெடுத்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் குடும்பத்திற்கு “ஆஹா” என்ற ஓடிடி தளம் உள்ளது.
undefined
அதில் டாக் ஷோ ஒன்றை தமன்னா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டி.வி. நிகழ்ச்சிகளில் நடித்தால் ஏதாவது பிரச்சனையாகிவிடும் என முதலில் சிந்தித்துள்ளார்.
undefined
ஆனால் ஏற்கனவே “தி நவம்பர் ஸ்டோரி” என்ற தமிழ் வெப் சீரிஸில் நடித்துள்ளதால் ஓடிடி தளத்தில் நடிப்பதில் தவறில்லை என்று முடிவெடுத்துவிட்டாராம்.
undefined
அதுமட்டுமில்ல தெலுங்கில் டாப் ஸ்டாரான அல்லு அர்ஜுன் கேட்டுக்கொண்டதால் தான் தமன்னா இதில் நடிக்க சம்மதித்ததாக தெரிகிறது.
undefined
இந்தியில் பிரபல தயாரிப்பாளர், நடிகருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி சூப்பர் ஹிட்டான ஷோ காபி வித் கரண். இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்று கரணுடன் கலந்துரையாடுவார்கள்.
undefined
இதுபோன்று காபி வித் மில்கி என தமன்னாவின் நிகழ்ச்சிக்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதில் பிரபாஸ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட தெலுங்கு ஸ்டார்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined
வாரம் ஒரு முறை ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமன்னாவிற்கு ஒரு எபிசோட்டிற்கு ரூ.10 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined
click me!