கோலிவுட்டில் அடுத்த அதிர்ச்சி... பிரபல இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி... மருத்துவமனையில் அனுமதி...!

First Published May 5, 2021, 12:01 PM IST

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வசந்த பாலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொரோனா தொற்று காரணமாக திரையுலகினர் அடுத்தடுத்து பாதிக்கப்படுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட் டூ கோலிவுட் வரை பாகுபாடு பார்க்காமல் திரையுலகினரை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது.
undefined
கொரோனா முதல் பரவலைப் போலவே 2வது அலையிலும் திரையுலகினர் பலரும் சிக்கித் தவித்து வருகின்றனர். நடிகர் சூர்யாவில் ஆரம்பித்து மாதவன், அதர்வா மற்றும் நடிகைகள் பூஜா ஹெக்டே, நந்திதா ஸ்வேதா, சமீரா ரெட்டி ஆகியோர் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
undefined
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றிலிருந்து பூரண நலமடைந்தார். அதே சமயத்தில் தமிழ் திரையுலகின் பிரபல கேமராமேனும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் கடந்த வாரம் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
undefined
தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வசந்த பாலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
undefined
ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் ஆகிய படங்களை இயக்கியவர் வசந்த பாலன். இவருடைய தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்நிலையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வசந்த பாலன் பூரண நலம் பெற வேண்டுமென திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
undefined
click me!