கேட்கும் போதே கேராகுதே... நல்லா தானே போய்கிட்டு இருக்கு... சர்ச்சை மேட்டரை அசால்ட்டாக டீல் செய்த வடிவேலு...!

First Published Jul 14, 2021, 4:50 PM IST

இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.5 லட்சம் கொரோனா  நிவாரண நிதி வழங்கிய வைகைப் புயல் வடிவேலு, கொங்குநாடு குறித்த சர்ச்சைக்கு தனது பாணியில் பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது.

கொரோனா 2வது அலையை எதிர்த்து போராடி வரும் தமிழக அரசுக்கு உதவும் வகையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் கோடிகளிலும், லட்சங்களிலும் நிதி வழங்கி வருகின்றனர். இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிரபல காமெடி நடிகர் வடிவேலு, கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
undefined
அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக இருக்கிறார். குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார்.
undefined
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளேன்.ஆட்சிக்கு வந்த 2 மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் கொரோனாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார். இது மக்களுக்கு பொற்காலம். கருணாநிதி இருந்திருந்தால் இந்த ஆட்சியை கண்டு பெருமை அடைந்திருப்பார் எனத் தெரிவித்த
undefined
தமிழக முதலமைச்சரே தெருத்தெருவாக சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். யார் மனதும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறார்.அனைவரும் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் ."மாஸ்க் போடுங்கப்பானா நாங்களாம் தேக்கு ணே , போ... ணே , போ... ணே னு சொல்றான் ; யப்ப தேக்குனாலும் கொரோனா அரிச்சிரும்பா...!" என நகைச்சுவையாக பேசினார்.
undefined
கொங்குநாடு குறித்த கேள்விக்கு, “இப்ப திடீர்னு கொங்குநாடு -ன்னு ஒரு சப்ஜெக்ட், ஹூம்.. ராம் நாடு, ஒரத்த நாடுன்னு ஒன்னு இருக்கு. அதை எல்லாம் பிரிச்சால் அவ்வளவு தான். நல்லா இருக்கிற தமிழ்நாட்டை எதுக்கு பிரிச்சுக்கிட்டு. நாடு, நாடு என தனித்தனியாக பிரித்தால் என்னாவது ?. நான் அரசியல் பேசல. இதெல்லாம் பேசும்போது தல சுத்துது”என தன்னுடைய பாணியில் பதிலளித்தார்.
undefined
click me!