4 வயது மகனை காப்பதற்காக போராடி உயிரை விட்ட பிரபல நடிகை... 6 நாட்களுக்குப் பிறகு கிடைத்த அதிர்ச்சி தகவல்...!

First Published Jul 14, 2020, 12:37 PM IST

2020ம் ஆண்டை நினைத்தாலே சினிமா ரசிகர்களுக்கு வெறுப்பு வரும் அளவிற்கு திரைத்துறை பிரபலங்களின் மரணமும், தற்கொலையும் மாறி மாறி அரங்கேறி வருகிறது. இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட், சிரஞ்சீவி சார்ஜா, சுஷீல் கவுடா என ஒட்டுமொத்த திரையுலகில் அடுத்தடுத்து துக்க சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சமீபத்தில் கூட பிரபல ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 


இந்நிலையில் நயா நிவோரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

ஹாலிவுட்டில் சினிமா மற்றும் டி.வி. ஷோக்களில் நடித்து வந்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நயா ரிவேரா.
undefined
கடந்த 8ம் தேதி காலை தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பீரு ஆற்றுக்கு தனது 4 வயது மகன் ஜோசியுடன் நயா படகு சவாரி சென்றுள்ளார்.
undefined
வாடகை படகில் சவாரி சென்ற அவர்கள் நீண்ட நேரமாக திரும்பாததால் சந்தேகமடைந்த படகின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
undefined
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு தனியாக இருந்த நயாவின் 4 வயது மகனை மட்டும் பத்திரமாக மீட்டுள்ளனர்.
undefined
அந்த சிறுவனிடம் விசாரித்த போது அம்மா நீரில் மூழ்கி நீந்தினார், அதன் பின்னர் வெளியே வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
undefined
இதையடுத்து நயா ஒருவேளை தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகப்பட்ட போலீசார், 4 நவீன ரக ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டையில் இறங்கினர்
undefined
கிட்டதட்ட 6 நாட்களுக்குப் பிறகு நயாவின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
undefined
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மதிய வேளையில் ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகரிக்கும், அதனை உணர்ந்த நயா மகனை பத்திரமாக படகில் ஏற்றியுள்ளார்.
undefined
அப்போது அந்த சிறுவன் லைப் ஜாக்கெட் அணிந்துள்ளார். ஆனால் பெரியவர்களுக்காக லைப் ஜாக்கெட் படகிலேயே இருந்துள்ளது.
undefined
இந்நிலையில் நீரின் வேகம் அதிகரித்திருக்கலாம் என்றும், அதில் சிக்கி நயா உயிர் இழந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
undefined
மகனை காப்பதற்காக நயா தனது உயிரையே தியாகம் செய்தது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
undefined
மீட்கப்பட்ட சிறுவன் தற்போது நயாவின் முன்னாள் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
undefined
click me!