என் கணவருக்கு 200 பெண்களுடன் உறவா?.... கொதித்தெழுந்த பிரபல இயக்குநரின் முன்னாள் மனைவிகள்...!

First Published Sep 22, 2020, 6:10 PM IST

இந்நிலையில் அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவிகளான ஆர்த்தி பஜாஜ் மற்றும் நடிகை கல்கி ஆகியோர் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 

இந்தி திரையுலகில் அடுத்தடுத்து பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. முதலில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை பெரும் புயலைக் கிளப்பியது. அதற்கு பிரபல நடிகர், நடிகைகளின் வாரிசு அரசியல் தான் காரணம் எனக்கூறி ரசிகர்கள் அவர்கள் மீது பாய்ந்தனர். அதன் பின்னர் கங்கனா ரணாவத் பாலிவுட்டில் போதைப்பொருள் புழக்கம் குறித்து அவிழ்த்துவிட, தற்போது அந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
undefined
இதுபோதாது என்று இந்தி திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
undefined
அதில், பட வாய்ப்பிற்காக சென்ற தன்னை அனுராக் காஷ்யப் படுக்கைக்கு அழைத்ததாகவும், அப்போது தனக்கு 200 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட அனுபவம் உண்டு என பெருமையாக கூறியதாகவும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தினார்.
undefined
இந்த புகாருக்கு பிறகு அனுராக்கிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவிகளான ஆர்த்தி பஜாஜ் மற்றும் நடிகை கல்கி ஆகியோர் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
undefined
இதுகுறித்து ஆர்த்தி பஜாஜ் வெளியிட்டுள்ள பதிவில், உலகின் நேர்மறை மூளை இல்லாதவர்களும், தோற்றுப்போனவர்களும் நல்லதுக்கு குரல் கொடுப்பவர்களின் ரத்தத்தை கேட்கிறார்கள். அடுத்தவர்களை வெறுப்பதற்காக அதிக சக்தியை செலவிடுகிறார்கள். ஆக்கப்பூர்வ பயன்படுத்தினால் இந்த உலகம் அழகானதாக மாறும். இவர்கள் செய்வது மலிவான யுக்தி. உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது குறித்து எனக்கும் வருத்தம் தான். ஆனால் நீங்கள் உயரத்தில் இருந்து குரல் கொடுக்க வேண்டும். நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
undefined
அதேபோல் நடிகை கல்கி, உங்கள் படங்களைப் போலவே நிஜத்திலும் நீங்கள் பெண்களுக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர் என்பதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவள். நம்முடைய பிரிவிற்கு பிறகும் கூட என்னுடைய மரியாதைக்கு முக்கியத்துவம் அளித்தீர்கள். உறுதியாக இருங்கள். இந்த போலி குற்றச்சாட்டுக்களை புறம் தள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.
undefined
click me!