சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இந்த கதை பிடித்து போக, உடனடியாக அப்போது குஷி பட சூட்டிங் இருந்த நடிகர் விஜயிடம் இந்த கதையை சொல்லுமாறு கூறி அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் புறப்பட்டு விஜயிடம் கதை சொல்வதற்காக சென்றேன். அப்போது நான் நடந்து செல்வதை பார்த்த நிக் ஆர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் என்னை அழைத்து, அஜித் இப்பொழுது தான் எனக்கு பேசினார், உடனடியாக உங்களை அவரது அலுவலகத்திற்கு அழைக்கிறார் என்று சொல்ல, உடனே அங்கு சென்றேன். அஜித்தை சந்தித்து விட்டு விஜயிடம் செல்லலாம் என்று தான் முடிவெடுத்தேன்.
ஆனால் அஜித்தின் அலுவலகத்திற்கு நான் சென்றபோது ஒரு புதிய மோட்டார் பைக், ஹெல்மெட் மற்றும் ஒரு பேஜர் ஒன்றையும் பரிசளித்து, இந்த திரைப்படத்தை உங்களுக்காக நான் செய்து தருகிறேன். கதை பிரமாதமாக இருக்கிறது. இந்த படத்திற்காக இரண்டு படங்களுடைய கால்ஷீட்டை கொடுக்கிறேன் என்று கூறி திகைக்க வைத்தார். பிறகு விஜியிடம் அந்த கதையை சொல்லாமலேயே விட்டுவிட்டேன்" என்று கூறியுள்ளார் அவர்.
அப்போ அந்த வில்லன் கார்த்தி தானா? மிரட்டலாக வெளியான கங்குவா படத்தின் ரிலீஸ் ட்ரைலர்!