Pa Ranjith: ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்; ஒட்டுமொத்த தலித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பா.ரஞ்சித்

First Published Jul 16, 2024, 6:08 PM IST

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித் இது தொடர்பாக தலித் தலைவர்கள் அனைவருக்கும் பொதுவான அழைப்பு விடுத்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி தனது வீட்டின் அருகே கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

நாட்டையே உலுக்கிய இக்கொடூர நிகழ்வு தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும். தலித்துகள், சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக கவேண்டியிருக்கிறது. அதில் அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணிலடங்கா. இதையெல்லாம் மீறி இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அம்பேத்கரியம் என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்த தலைவர்களே நம் பலம். நூறு வருடத்திற்கும் மேலான தலித் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவரின் இருப்பே கேள்விக் குறியாகி இருப்பது சுலபமாகக் கடந்து போகக்கூடிய நிகழ்வல்ல.

Latest Videos


சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்கிற ஆளுமையை வீழ்த்திவிட்டால் அவர்தம் நம்பிய அரசியலு வீழும் என்கிற சிந்தனை உதிப்பதற்கு முன்பே அதைப் பொய்ப்பிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. பாபாசாகேப் அம்பேத்கரை நெஞ்சிலேந்தி இவ்விழப்பு ஒரு குடும்பத்திற்கோ, இயக்கத்திற்கோ நேர்ந்ததாகக் கருதாமல் நம் ஒவ்வொருவருக்கும், சமூகத்திற்கும் நேர்ந்த இழப்பு எனப் பறைசாற்றுவோம்.

சாதி, மதம் மற்றும் இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு, தான் நம்பிய தத்துவத்தின்படி வாழ்ந்த சமூக வீரர் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் செயற்பாடுகளை நினைவிலேந்தி சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி, இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாகச் சனெ்று அங்கு நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் பெருந்திரளாக அணியமாகி, கட்சி பாகுபாடு இல்லாமல் அணிதிரல்வோம். வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளை தண்டித்திடவும், தலித் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் குரல் கொடுப்போம்.

அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் இணைவோம் வாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!