இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் நான்கு ஆண்டு மட்டுமே பணிபுரிந்து ஓய்வு பெற்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வியுடன் போராட்டம் வெடித்து. குறிப்பாக குறிப்பாக, பீகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் போராட்டம் தீவிரமாகக் காணப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் பலவும் ஆதரவு கரம் நீட்டியுள்ளது. நம்ம ஊர் அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே அளவு ஆதரவு தெரிவிப்பவர்களும் உண்டு. அந்த வரிசையில் இயக்குனர் பேரரசும் சேர்ந்துள்ளார். அவ்வப்போது போது பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் இயக்குனர் தற்போது “அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தீய சக்திகள்” என கடுமையாக சாடியுள்ளார்.