நடிகர் சிம்புவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை அப்படம் ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அப்படம் ரிலீஸ் ஆகி 15 ஆண்டுகள் கடந்தபோதிலும் இன்றளவும் அதற்கு ஈடு இணையாக எந்த காதல் படமும் ரிலீஸ் ஆகவில்லை. அந்த படத்தை பார்த்தால் காதலில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட காதல் வந்துவிடும் அந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாக எடுத்திருப்பார் கெளதம் மேனன். அப்படத்துக்கு பின் அஜித்தை வைத்து என்னை அறிந்தால், சிம்புவின் அச்சம் என்பது மடமையடா, தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை இயக்கினார்.