
தனது தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அதன் பிறகு 1992ம் ஆண்டு தமிழில் தனது அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தின் மூலம் நடிகனாக அறிமுகமானவர் தான் விஜய். தொடக்க காலத்தில் பெரிய அளவிலான விமர்சனங்களை அவர் எதிர்கொண்ட நிலையில், மெல்ல மெல்ல தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நாயகனாக மாறினார். தன்னுடைய இளமை காலத்திலேயே ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தாண்டி, ஜனரஞ்சகமான நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து இளைய தளபதியாகவும், பின் தளபதி விஜய் என்கின்ற அந்தஸ்துக்கும் அவர் உயர்ந்தார்.
இன்றைக்கு தமிழ் சினிமாவை பொறுத்தவரை புகழின் பூச்சியில் இருக்கும் வெகு சில நடிகர்களில் அவரும் ஒருவர். அவருடைய ஒரு பட சம்பளத்தை பற்றி கேட்டாலே நமக்கு தலை சுற்றல் வரும். அந்த அளவிற்கு புகழின் உச்சியில் அவர் இப்பொது பயணித்து வருகின்றார். அதுமட்டுமல்ல, அவருக்கான ரசிகர்கள் கூட்டமும் பெரிது.
ஒரே பாட்டு.. அதில் நாலு சூப்பர் பாடகர்களை மிக்ஸ் பண்ணி மிரட்டிவிட்ட இளையராஜா - எந்த பாடல் தெரியுமா?
படங்களில் அரசியல்
கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் அரசியலில் களமிறங்க போவதாக பல தகவல்கள் வெளியானது. இருப்பினும் அதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வந்தாரா? என்று கேட்டால் அது மர்மமாகவே இருந்து வந்தது. இந்த சூழலில் தான், விஜய் தான் நடிக்கும் படங்களில் அதிக அளவில் அரசியல் பேச தொடங்கினார். குறிப்பாக "மெர்சல்" என்ற திரைப்படத்தில் வந்த "ஆளப்போறான் தமிழன்" என்கின்ற பாடலும், 2018 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான "சர்க்கார்" திரைப்படமும், விஜயன் அரசியல் வருகை குறித்து பெரிய அளவில் பேசியது.
அதுமட்டுமல்ல கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பங்கேற்கும் தனது திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களிலும் தன்னுடைய அரசியல் வருகை குறித்து பேசிக் கொண்டிருந்த அவர், பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்து அதில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை அழைத்து அவர்களுக்கு பரிசுகளை அளித்து விழா ஒன்றை நடத்தினார். அதிலும் அவர் பல அரசியல் சம்பந்தமான விஷயங்களை பேசி இருந்தது. குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தான் இந்த 2024ம் ஆண்டின் துவக்கத்தில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியினை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் தளபதி விஜய். ஆனால் அவர் தனது கட்சியை குறித்து மட்டும் அறிவிக்காமல், யாருமே சற்றும் எதிர்பார்க்காத பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டார். அது தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரு திரைப்பட பணிகளை முடித்துவிட்டு, சினிமாவிற்கு முழு நேர ஒய்வை கொடுத்துவிட்டு, முற்றிலும் அரசியல் தலைவராக தன்னை மாற்றிக் கொள்ள இருப்பதாக அதிர வைக்கும் தகவல்.
பொதுவாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்பவர்கள் திரைப்படங்களில் தங்களுக்கான மவுசு குறைந்த பிறகு அப்படி ஒரு முடிவை எடுப்பார்கள். ஆனால் 150லிருந்து 200 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுக்கொண்டு, தன்னுடைய கால் சீட்டுக்காக காத்திருக்கும் பல இயக்குனர்களை அருகில் வைத்துக்கொண்டு புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் தளபதி விஜய் இந்த முடிவை எடுத்தது பலருக்கு ஆச்சரியத்தையும், அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்தது. அடுத்தடுத்து தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிவித்த விஜய், இம்மாத இறுதியில் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்த உள்ளார்.
இந்த சூழலில் பிரபல இயக்குனரும், நடிகருமான போஸ் வெங்கட் தளபதி விஜயின் அரசியல் வருகை குறித்து பேசி இருக்கிறார். விரைவில் நடிகர் விமலின் நடிப்பில் "சார்" என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பது போஸ் வெங்கட் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள போஸ் வெங்கடிடம் தளபதி விஜயின் அரசியல் வருகை குறித்து கேட்ட பொழுது "தளபதி விஜய் மிகவும் தவறான நேரத்தில் அரசியலுக்கு வந்திருக்கிறார். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது கல்வியிலும் பொருளாதாரத்திலும் தமிழகம் ஏற்கனவே முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது."
"ஆகையால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு, அதாவது குறைந்தது நான்கு தேர்தலுக்கு பிறகு தான் அவருக்கான வெற்றிக்கு வாய்ப்பு இருக்கிறது. காரணம் சீமான் போன்றவர்கள் அதிமுக திமுக கட்சிகள் போன்றவை வேண்டாம் என்று தனித்து பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். எனக்கும் சீமானுக்குமான அரசியல் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒரு அரசியல் தலைவராக அவரை நான் மிகவும் மதிக்கிறேன். விஜயின் இந்த சூழலில் அரசியலுக்கு வரும்பொழுது அவருக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று கூறியிருக்கிறார்.
இளையராஜா இசையில் உதடு ஒட்டாத வார்த்தைகளால்.. வாலி எழுதிய பாடல் எது தெரியுமா?