இது ஒரு புறம் இருக்க, தளபதி விஜய்யின் மாநாட்டில் அவர் பேசிய முக்கிய விஷயங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
ஆயிரக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில், பிரம்மாண்ட மேடையில் தன்னுடைய பவுன்சர்களுடன் நடந்து மேடைக்கு வந்த விஜய், தமிழ்நாட்டில் பிறந்து.. இந்திய சுதந்திரத்திற்காக உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் திருவுருவ படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதற்கு முன் எத்தனையோ அரசியல் மாநாடுகள் அதிமுக சார்பிலும், திமுக சார்பிலும் நடத்தப்பட்ட போதிலும் இதுபோல் அனைவரது புகைப்படங்களையும் ஒன்று சேர வைத்து யாரும் மரியாதை செய்ததில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று.
பின்னர் 100 அடி உயர கம்பத்தில் தன்னுடைய கட்சி கொடியை ஏற்றிய பின்னர்... தமிழ் தாய் வாழ்த்து உடன் நிகழ்ச்சி துவங்கியது. கட்சியின் உறுதிமொழி ஈர்க்கப்பட்ட பின்னர் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த விஜய், தன்னுடைய பெற்றோரிடம் ஆசி பெற்றார்.
இதன் பின்னர் இதுவரை யாரும் பார்த்திடாத முழு அரசியல் விஜயின் அவதாரத்தில்.. கர்ஜிக்கும் குரலுடன் தன்னுடைய உரையை துவங்கினார். தன்னுடைய அரசியல் வருகையை விமர்சிப்பவர்களுக்கு, பதிலடி கொடுக்கும் விதத்தில், அரசியல் என்ற பாம்பை கண்டு பயமில்லை.. அதை கையில் பிடித்து விளையாட போவதாக தளபதி கூறியது அரங்கத்தையே அதிர வைத்தது.
சன் டிவியில் இருந்து விலகி.. ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவிய சீரியல் ஹீரோயின்!