துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இவர், அடுத்ததாக அரவிந்த் சாமியை வைத்து நரகாசூரன் படத்தை இயக்கினார். இப்படம் ரிலீசாகாமல் முடங்கிக் கிடக்கிறது. இதையடுத்து அருண்விஜய்யின் மாஃபியா படத்தை செம்ம ஸ்டைலிஷாக எடுத்து அனைவரையும் அசர வைத்தார்.