கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவே மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதியினர், சிறுவயதில் தொலைந்து போன தங்களுடைய மகன்தான் தனுஷ் என்று, நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தனுஷ் நேரிலும் ஆஜராகி உள்ளார். இவரின் அங்க அடையாளங்கள் குறித்த சோதனையின் போது. லேசர் மூலம், சில அடையாளங்கள் அழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. எனினும் தனுஷ் தரப்பில் இருந்து இது முற்றிலும் வதந்தி என கூறப்பட்ட நிலையில், ஒரு நிலையில் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.