மீண்டும் மிரட்டப்போகும் அண்ணன் - தம்பி கூட்டணி... “ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2”-வில் காத்திருக்கும் சர்ப்பைரஸ்

First Published Jan 2, 2021, 11:14 AM IST

அத்துடன் செல்வராகவன் - தனுஷ்- யுவன் ஷங்கர் ராஜா மூவர் கூட்டணி மீண்டும் திரையில் வர உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சூப்பர் ஹிட் அடைந்தது. அதுமட்டுமின்றி புதுப்பேட்டை, காதல் கொண்டேன் படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.
undefined
அதேபோல் இவர்களது வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் யுவன் ஷங்கர் ராஜாவின் மேஜிக் இசை. சமீபத்தில் 8வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைய உள்ளதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
undefined
அத்துடன் செல்வராகவன் - தனுஷ்- யுவன் ஷங்கர் ராஜா மூவர் கூட்டணி மீண்டும் திரையில் வர உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனால் தனுஷ், செல்வராகவன் ரசிகர்கள் செம்ம ஹேப்பியாகினர்.
undefined
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, பார்த்திபன், ரீமா சென் உள்ளிட்டோர் நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் கடந்த 2010ம் ஆண்டு வெளியானது. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக மிரட்டிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் படி செல்வராகவனுக்கு ரசிகர்கள் அன்புக்கட்டளை போட்டு வந்தனர்.
undefined
தற்போது தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக செல்வராகவன் அறிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், இது வரை கேட்டிருந்த ,காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்குஇதோ உங்கள் முன்னால் என பதிவிட்டுள்ளார்.
undefined
தனுஷ் தனது ட்விட்டரில், மேக்னம் ஓபஸ். ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் மட்டுமே ஓராண்டு காலம் எடுக்கும். ஆனால் மாஸ்டர் செல்வராகவனிடம் இருந்து வரும் கனவுப் படம். காத்திருப்பு அதிகம் தான். ஆனால் அந்த காத்திருப்புக்கு ஏற்றபடி படம் இருக்கும். AO2 ..பிரின்ஸ் 2024ம் ஆண்டு திரும்பி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
undefined
click me!